Tuesday, February 15, 2011

ராத்திரிப் பொழுது...

இன்றைய இந்தப் பாடலைப் பாடியவர் பீ.ஜெயச்சந்திரன்.
பாடல் இதோ:




பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...

ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது

சரணம் 1:
ஓடையில, குளிர் வாடையில
ஓடையில, குளிர் வாடையில 

ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு

ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்

இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய் 

ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய் 

-பாடல் தொடர்கின்றது இப்படி. நீங்கள் கேட்டதுண்டா?

படம்: ஒரு ஓடை நதியாகிறது (என்று நினைக்கிறேன்.)
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்

இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் 
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

முந்தின பின்வரும் பதிவுகளில் தற்போது விடியோக்களும்
இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்.


(நன்றி: கஸ்ஸாலி.)
நன்றி! 
!

Tuesday, February 8, 2011

'ஒரு ஊரில் ஊமை ராஜா'

ன்றைய பாடல் 'ஒரு ஊரில் ஊமை ராஜா' என்ற பாடல்!
சிவகுமார், அம்பிகா நடிப்பில் வெளியான 'தீர்ப்புகள்
திருத்தப்படலாம்' என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல்.



பாடல் 14:
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ?  

சரணம் 1:
நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?

நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?


விழிகள் காண்பதென்ன மெய்தானா?
விளக்கில் என்ன இருளா?
இது கிழக்கில் அஸ்தமனமா?

கண்கள் சொல்லும் சாட்சி ஒன்று
நெஞ்சம் சொல்லும் சாட்சி ஒன்று
எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ? 




சரணம்: 2
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்


மலரில் மாலைகட்டி நான் தந்தேன்
சிலுவை எதற்கு சுமந்தாய்?
என் மனதில் ஆணி அறைந்தாய்!
விக்கலுக்கு தண்ணி உண்டு
சிக்கலுக்கு என்ன உண்டு?
சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ?


ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ? 



-இதுதான்  பாடல்! . 

படம்: தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்
இயக்கம்: எம்.பாஸ்கர்
நடிகர்கள்; சிவகுமார், அம்பிகா
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்கள் : சங்கர் - கணேஷ்.


'தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்' படத்தில் இரு பாடல்கள் மட்டுமே
உண்டு. இயக்குனர் எம்.பாஸ்கரின் அடுத்த படமான 
'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' படத்தில் ஒரு பாடல் மட்டுமே!

மேற்படி பாடலின் பாடலாசிரியர் பற்றிய விவரம்  தெரியவில்லை.

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை
அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

நன்றி!
!  



    
Related Posts Plugin for WordPress, Blogger...