ஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும்.
சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார்.
பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணிடம் பேச்சு கொடுப்பார்.
சோ : "இந்தக் குழந்தை அழகாயிருக்கு. இது உங்க குழந்தையா?:"
பெண்: "ஆமாம்!"
சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
அந்தப் பெண் சோவை பளார் என்று அறைந்து விடுவார்.
இதை தனது நண்பனிடம் சொல்வார் சோ.
சோ: "அவள் எப்படி அடிச்சா தெரியுமாடா?"
நண்பர்: "எப்படிடா அடிச்சா?"
சோ, நண்பரை பளார் என்று அறைந்துவிட்டு "இப்படித்தான்டா அடிச்சா" என்பார்.
நண்பர்: "ஏன்டா இப்படி குடிச்சி உடம்பைக் கெடுத்துக்கிறே?"
சோ :"டாக்டர்தான்டா என்னைக் குடிக்கச் சொன்னார்" என்பார்.
(சாராயக்கடையைத் திறந்த டாக்டர் கலைஞரைக் குறிப்பிடுகிறார்.)
சோ : "டேய் அடி வாங்காம எப்படிடா பெண்கள்கிட்ட பேசுறது?"
நண்பர் ஐடியா தருவார். "முதல்ல கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டுவிட்டு
அப்புறமா குழந்தை உங்களுதானு கேட்கணும்" என்பார் நண்பர்.
மறுநாள் பஸ் ஸ்டாண்டில் குழந்தையுடன் நிற்கும் வேறு பெண்ணிடம் கேட்பார் சோ.
சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
பெண்: "இல்லை!"
சோ : "இந்தக் குழந்தை உங்களுதுதானே?"
அந்தப் பெண்ணிடமும் அறை வாங்குவார் சோ.
-இந்த நகைச்சுவை எந்தப் படத்தில் இடம்பெறுகிறது?
தெரிந்தவர்கள் சொல்லவும்.
பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணிடம் பேச்சு கொடுப்பார்.
சோ : "இந்தக் குழந்தை அழகாயிருக்கு. இது உங்க குழந்தையா?:"
பெண்: "ஆமாம்!"
சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
அந்தப் பெண் சோவை பளார் என்று அறைந்து விடுவார்.
இதை தனது நண்பனிடம் சொல்வார் சோ.
சோ: "அவள் எப்படி அடிச்சா தெரியுமாடா?"
நண்பர்: "எப்படிடா அடிச்சா?"
சோ, நண்பரை பளார் என்று அறைந்துவிட்டு "இப்படித்தான்டா அடிச்சா" என்பார்.
நண்பர்: "ஏன்டா இப்படி குடிச்சி உடம்பைக் கெடுத்துக்கிறே?"
சோ :"டாக்டர்தான்டா என்னைக் குடிக்கச் சொன்னார்" என்பார்.
(சாராயக்கடையைத் திறந்த டாக்டர் கலைஞரைக் குறிப்பிடுகிறார்.)
சோ : "டேய் அடி வாங்காம எப்படிடா பெண்கள்கிட்ட பேசுறது?"
நண்பர் ஐடியா தருவார். "முதல்ல கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டுவிட்டு
அப்புறமா குழந்தை உங்களுதானு கேட்கணும்" என்பார் நண்பர்.
மறுநாள் பஸ் ஸ்டாண்டில் குழந்தையுடன் நிற்கும் வேறு பெண்ணிடம் கேட்பார் சோ.
சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
பெண்: "இல்லை!"
சோ : "இந்தக் குழந்தை உங்களுதுதானே?"
அந்தப் பெண்ணிடமும் அறை வாங்குவார் சோ.
-இந்த நகைச்சுவை எந்தப் படத்தில் இடம்பெறுகிறது?
தெரிந்தவர்கள் சொல்லவும்.
7 comments:
இந்தப் படம் எம் ஜி ஆர் நடித்த தேடி வந்த மாப்பிளை அல்லது ராமன் தேடிய சீதை என்று நினைக்கிறேன். அல்லது தேன் கிண்ணமோ தேன் மழையாகவோ இருக்கலாம் நானும் இந்தப் படத்தை பார்த்திருக்கின்றேன்.
Good joke!! Read this before, film No idea...
1973-இல் sp .முத்துராமன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ,ஜெயா ,vkr ,சோ,மனோரமா [இரட்டை வேடம் ]mrr .வாசு ,சுருளி முதலியோர் நடிப்பில் வந்த ஒரு முழு நீளஹாஸ்ய சித்திரமின்றே கண்டு களியுங்கள் .
நன்றி காரிகன்!
நன்றி Jayadev Das!
நன்றி knvijayan !
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html
Post a Comment