பாடல் 11 :
ஆண்:
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
முத்துமணி தந்த மோகத்திலே...
பத்து விரல் தந்த தாகத்திலே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு..
சரணம்:
பெண்:
காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ
காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ
உள்ளமே என்றுமே தவிப்பு
பறிபோனது என்சிரிப்பு
ஆண்:
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
வந்தேன் காவலுக்கு
கலங்காதிருப்பாய் மனமே
சுகமே வருமே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
-இவ்வாறு பாடல் தொடர்கிறது.
பாடகர்கள் :
ஆண் குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
பெண் குரல்: சாயா
'ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே கண்ணில் என்ன
சோகம்' என்ற பாடலில் ஜேசுதாஸ் பாடுவதைத் தொடர்ந்து
வரும் குழ்ந்தை பாடும் வரிகளைப் பாடியவர்தான் இந்த பாடலில்
ஜேசுதாசுடன் பாடிய பெண் பாடகர்.
படம், கவிஞர், இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள்
தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?
இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
கருத்துக்களை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
நன்றி!
!
11 comments:
படம்:இளமை காலங்கள்,இசை:இளையராஜா,இயக்கம்:மணிவண்ணன்
இளையராஜா இசையமைத்த சிரிச்சா கொல்லிமலை குயிலு பாடல் இடம்பெற்ற படம் மோகன்- அம்பிகா நடித்த ஜோதி
@ சேக்காளி!
தங்கள் தகவல்களுக்கு நன்றி சேக்காளி!
மேலும் பாடலாசிரியர் பெயரை இன்னும்
அறியமுடிவில்லை.
அடுத்த பின்னூட்டத்தில் 'படத்தின் பெயர்
ஜோதி' என்று குறிப்பிட்டுள்ளார் ரஹீம்
கஸ்ஸாலி!
மற்ற நண்பர்களிடம் தகவல் எதிர்பார்ப்போம்!
தொடர்ந்து வாருங்கள் சேக்காளி!
@ ரஹீம் கஸாலி!
படம் பெயர் 'ஜோதி'!
இந்த தகவல் தந்தமைக்கு நன்றி
கஸ்ஸாலி!
தகவலுக்கு நன்றி கலையன்பன்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
@ r.v.saravanan ...
கருத்திட்டமைக்கு நன்றி!
வாழ்த்தளித்தமிக்கு நன்றி!
பாடலாசிரியர் வைரமுத்து!
இங்கே வந்தால் பல இசைத்தட்டு உறைகளின் படங்கள் காணலாம்!
http://ilayaraja.forumms.net/t63p150-vinyl-lp-record-covers-speak-about-ir-pictures-details#5244
விளக்கம்ளித்த உங்களுக்கு நன்றி!
உங்க பெயர் என்னங்க?
வைரமுத்து வரிகள்,பாடகி பி.ஆர்.சாயா கன்னட பாடகி ,இவர் இளமைக்காலங்கள் படத்தில் ஈரமான ரோஜாவே பாடலில் குழந்தைக்கான குரலில் பாடியிருப்பார்.
ஏற்கனவே பெங்களூர் மஞ்சுளா என்னும் கன்னடப் பாடகி நல்லவனுக்கு நல்லவன் படத்தின் உன்னைத்தானே பாடலும் பாடியிருப்பார்.
@ Karthikeyan Vasudevan ...
தகவலுக்கு நன்றி சார்!
Post a Comment