Tuesday, August 20, 2013

பாட்டு ஒற்றுமை (2)


பாட்டு ஒற்றுமை (2)

இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
(படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.)

"காதல் என்பது பொதுவுடம
அதில் கஷ்டம் மட்டும்தானே தனிவுடம
அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா?
அதை இப்போது
நீயுந்தான் மறக்க முடியுமா?"

'சவாலே சமாளி' படத்தில் இடம்பெறும் டீ.எம்.சௌந்திரராஜன்
பாடிய இந்தப் பாடலையும் கேட்டிருப்பீர்கள்.

"நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே!

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது
(நிலவைப் பார்த்து....)

ராகத்தைத் தாளம் தொடாமல் போய்விடில்
பாடலை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இலையே
நீயும் இல்லையே இங்கு நானும் இல்லையே
(நிலவைப் பார்த்து...)"

இளையராஜா பாடியது:
"அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா?"

சௌந்திரராஜன் பாடியது:
"தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இலையே"

(இந்தப் பாடல் பற்றிய மற்றோர் ஒப்பீடு,
'பாட்டு ஒற்றுமை - 3'-ல் காணலாம்.)

ஆக, ஒரே கருத்தை, இரு கவிஞர்கள்
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?

இரு கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.

-கலையன்பன்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்.........!

'பரிவை' சே.குமார் said...

உங்கள் ரசனையை நானும் ரசித்தேன்.

கலையன்பன் said...

... திண்டுக்கல் தனபாலன் ...

ரசித்து சொன்னீர்கள் கருத்து; நன்றி!

கலையன்பன் said...

... சே. குமார் ...

ரசனையை ரசித்ததற்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...