Saturday, October 26, 2013

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடித்த படம்
'தூங்காதே தம்பி தூங்காதே!'  பட்டுக்கோட்டை திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடலின் முதல் வரியை எடுத்து, படத் தலைப்பாகப் பயன்படுத்திக் கொண்டது அந்நிறுவனம்.

அந்தப் படத்தில் எஸ். பீ. பாலசுப்ரமணியன் ஒரு பாடல் பாடியிருப்பார். அந்தப் பாடல்:

தூங்காதே தம்பி தூங்காதே! - இப்போ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே  
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம
புரட்சியாரு பாடி வச்ச பாட்டு
முழிச்சிக்கடா நீயும் அதக் கேட்டு - உன்
சுறுசுறுப்பக் காரியத்தில் காட்டு... 


ஆக, அந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். ஆனால், தனது குரலால் அதைப் பாடியவர் திரு.டீ.எம்.சௌந்தர்ராஜன் அல்லவா? அப்படியிருக்க...
'புரட்சியாரு பாடிவச்ச பாட்டு' என்று எழுதுவது பொருத்தமல்லவே?


புரட்சியாரு அதாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பாடலுக்கு நடித்தார் என்பதுதான் உண்மை. புரட்சியாருக்கு குரல் கொடுத்தவர் டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ். அவர்களே என்றும் இது மறுக்க முடியாத உண்மை என்றும் உறுதியாக, அறுதியிட்டுக் கூறுகிறேன்.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
டீஎம்மெஸ்ஸு பாடி வச்ச பாட்டு


அல்லது

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு  பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
புரட்சியாரு நடிச்சிவச்ச பாட்டு!!!


-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... ஆனால் அன்றைக்கு MGR, சிவாஜி பாடுவதாகவே நினைத்தார்கள்...

Ramarao said...

தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்து பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி.

அவர்தான் மறைந்துவிட்டாரே. அவரது மகனிடம் கேட்கலாமே.

பின்னணி கலைஞர்களை விட முன்னணி கலைஞர்களுக்கு தானே வரவேற்பு அதிகம். அதனால் கவிஞர் வாலி மீது தவறில்லை என்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

சரி... ஆனால் எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டுன்னுதானே சொல்றோம்...

கலையன்பன் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
சரி தான்... //


சரிதான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி!
அதேபோல் தங்கள் கருத்தும் சரிதான்...
என்று நானும் ஒத்துக் கொள்கிறேன்.

முதலாவதாக வந்து நல்கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி சார்!

கலையன்பன் said...

...Ramarao...

"பின்னணி கலைஞர்களை விட முன்னணி கலைஞர்களுக்கு தானே வரவேற்பு அதிகம்"

காரணத்தை சரியாக விளக்கி கருத்து
இட்டமைக்கு மிக்க நன்றி சார்!

கலையன்பன் said...

...சே. குமார்...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...